உ
ஸ்ரீ ராம நாம மகிமை
ஸ்ரீராம
என்னும் மந்திரத்தை, வால்மிகிக்கு முதன் முதலில் கற்றுத்தந்தவர், தேவரிஷி நாரதர் அவர்கள்.
வால்மீகி பிறப்பால் ஒரு அந்தணரோ, படிப்பறிவு பெற்ற குடும்பத்தைச் சார்ந்தவரோ இல்லை.
ரத்னாகர் என்ற பெயரில் வாழ்ந்த ஒரு வழிப்பறி கொள்ளைக்காரன். ஒரு நாள் தேவரிஷி இவனிடம்
மாட்டிக்கொள்கிறார். ரத்னாகரிடமிருந்து தப்பிக்க, ஒரு கேள்வியைக் கேட்கிறார், ரிஷி.
இந்த
கொள்ளையடிக்கும் பாவத்தை ஏன் செய்கிறாய் என்று கேட்க, தன் குடும்பத்திற்க்காகச் செய்கிறேன்
என்று பதில் கூறினான், ரத்னாகர். அவர்களைக் காக்க நீ கொள்ளை அடித்தால், பாவம் உண்டாகும்,
நீ பாவியாவாய்; உன் பாவத்தில் உன் குடும்பத்தார் பங்கெடுத்துக் கொள்வார்களா என்று கேட்டார்
நாரதர். தன் குடும்பத்திற்காகத் தானே கொள்ளையடிக்கிறேன், அதனால் அவர்கள் தன் பாவத்தில்
பங்கெடுத்துக் கொள்வார்கள் என்று நம்பிய ரத்னாகர் உறுதியாக ஏற்றுக்கொள்வார்கள் என்றான்.
அதை உறுதி செய்ய, வீட்டிற்குச் சென்று கேட்டு வரச் சொன்னார், நாரதர். நாரதரை ஒரு மரத்தில்
கட்டிப்போட்டுவிட்டு வீட்டிற்குச் சென்றான், ரத்னாகர்.
அதேபோல்,
ரத்னாகர் வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் தான் கொள்ளையடிக்கும் பாவத்தில் பங்கெடுத்துக்
கொள்வார்களா என்று கேட்டான். பெற்றோரைக் காப்பது மகனின் கடமை என்றும், அதில் அவர்களால்
பங்கெடுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறிவிட்டனர்.
தன்
மனைவியிடமும் அதையே கேட்டான் ரத்னாகர். அவன் மனைவியோ, கணவனை நம்பியே மனைவி வந்திருப்பதாகவும்,
மனைவியைக் காப்பதும், உணவளிப்பதும் கணவனின் கடமை என்றும் கூறி, பாவத்தில் பங்கெடுக்க
மறுத்துவிட்டாள்.
மனம்
வருந்திய ரத்னாகர் மீண்டும் தேவரிஷியைக் கட்டிப்போட்ட இடத்திற்கு வந்தான். நடந்ததைக்
கூறி வருந்தினான். தான் செய்த பாவங்களில் இருந்து விடுபட வேண்டினான்.
தேவரிஷி “ராம”
என்று சொல்லச் சொன்னார். ரத்னாகர் “மரா” என்று சொன்னான். மீண்டும் தேவரிஷி “ராம” என்று
சொன்னார். ரத்னாகர் “மரா” என்று சொன்னான்.
ராம
என்று ரத்னாகருக்கு உச்சரிக்கத் தெரியவில்லை. “மரா” என்றே ஒவ்வொரு முறையும் உச்சரித்தான்.
தேவரிஷி சற்றே சிந்தித்துவிட்டு, “மரா மரா மரா” என்று திரும்பத்திரும்ப இடைவிடாது கூறச்சொன்னார்.
ரத்னாகரும் “மரா மரா மரா” என்றே கூறினான். கண்களை மூடி “மரா மரா” என்று கூறினான். தன்னை
“மரா” மந்திர உச்சாரணையில் மறந்த ரத்னாகரின் உச்சரிப்பு “ராம ராம ராம” என்று மாறியது.
மராமராமரா என்று கூறினால், அது ம ராம ராம ராம ரா என்று அருள் தரும்.
அந்த
படிபறிவில்லா கொள்ளைக்காரன் ரத்னாகரை மஹரிஷி வால்மீகியாக மாற்றியது “ராம” நாமம். இந்த
வால்மீகி தானே ஸ்ரீமத் இராமாயணத்தை உண்மை உருவில் எழுதியுள்ளார்!
ராம நாமம் எதையும் தரும் வள்ளல்; எதையும் தர வல்லது.
சொல்வீர் -ராம ராம அல்லது மரா மரா...
No comments:
Post a Comment